தமிழகத்தில் அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்கள்- முதலமைச்சர் அதிரடி உத்தரவு

அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவு.நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவர்களுக்கு பயிற்சி.
தமிழகத்தில் அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்கள்- முதலமைச்சர் அதிரடி உத்தரவு
Published on

தமிழகத்தில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தடுப்பு நவடிக்கைகளை் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் 5 முக்கிய உத்தரவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்தார்.

அதில், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடல்நலம் பாதித்து சாலைகளில் திரியும் நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்க காப்பகங்கள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து துறைகளும் இணைந்து நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com