பிரதமர் உரிய தீர்வை வழங்குவார் என நம்புகிறேன்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடிக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
பிரதமர் உரிய தீர்வை வழங்குவார் என நம்புகிறேன்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு பிரதமர் மதிப்பளிப்பார் என நம்புகிறேன் என பிரதமர் மோடிக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை - நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக ரெயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com