பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!

கடந்த 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று முதல் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!
Published on

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கலையொட்டிய தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிறுவனங்களை நடத்தி வருபவர்களும் தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து விட்டு அவர்களும் ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தனர்.

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று முதல் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

இன்று முதல் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படுவதால், விடுமுறைக்காக குடும்பத்துடன் தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பி வரத்தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக திருச்சி சென்னை NH சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை நோக்கி வரும் கார்கள், பேருந்துகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் பேருந்துகள் நகர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னைக்கு திரும்புவதையடுத்து செங்கல்பட்டு டோல்கேட், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், தாம்பரம் ரெயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com