

சென்னை:
கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய சகோதர சகோதரிகளுக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
நன்னெறி, இரக்கம், பக்தி மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகிய காலத்தால் அழியாத நற்பண்புகளைக் கொண்ட, நமது நாகரிக நெறிமுறைகளின் அடித்தளங்களை நினைவூட்டும், கருணைமிக்க மகாபலி சக்கரவர்த்தியின் வரவை நாம் இந்நாளில் கொண்டாடுகிறோம். அவரது ஆசிகள் ஒவ்வொரு இல்லத்தையும் அமைதி, வளம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தால் நிரப்பட்டும்.
வளமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் கலாசார ரீதியாக வேரூன்றிய வளர்ச்சியடைந்த பாரதம் 2047 -ஐ உருவாக்குவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை வலுப்படுத்த ஓணம் உணர்வு நம்மை ஊக்குவிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.