இரண்டு மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல்

தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பொது கட்டிட உரிம திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்.மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கவர்னரை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல்
Published on

தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பொது கட்டிட உரிம திருத்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாக்களை தமிழக அரசு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தது. தற்போது இந்த இரண்டு மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் நிலுவையில் வைத்திருப்பது சட்ட விரோதம் என ஏப்ரல் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. தீர்ப்பளித்த அடுத்த நாளே இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com