

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள் சங்கங்கள் நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவெடுக்கும் வகையில் அமைச்சர்கள் குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
குழுவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயன்விழி செல்வராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.