மழையில் நனையாமல் இருக்க நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

நெல்மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்வதையும், கொள்முதல் செய்த நெல்மூட்டைகளைப் பாதுகாப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.தமிழக அரசு தற்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்ப நஷ்டஈடு வழங்க வேண்டும்.
மழையில் நனையாமல் இருக்க நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Published on

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நேற்றைய தினம் கடலுர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமுற்றன. பல இடங்களில் நெல் அறுவடை முடியும் தருவாயில் தற்போது பெய்த மழையால் அறுவடைப்பணி பாதிக்கப்பட்டு, நெல்லும், சில இடங்களில் பருத்தியும் சேதமடைந்துள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக தமிழகம் முழுவதும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு நெல்மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்வதையும், கொள்முதல் செய்த நெல்மூட்டைகளைப் பாதுகாப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசு தற்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்ப நஷ்டஈடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com