மத்திய பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு 9 மடங்கு அதிகம்- பிரதமர் மோடி

புனிதமான மதுரை மண்ணிற்கு வந்ததை மிகப்பெரிய கவுரவமாக பார்க்கிறேன்.கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
மத்திய பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு 9 மடங்கு அதிகம்- பிரதமர் மோடி
Published on

மதுரை விமான நிலையத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி வணக்கம் எனக்கூறி தனது உரையை தொடங்கினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

மதுரையை காக்கும் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரருக்கு தலைவணங்குகிறேன், அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும்.

இன்று அடிக்கல் நாட்டப்பட்ட ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களால் வேலைவாய்ப்பு, சிறந்த கட்டுமானங்கள் கிடைக்கும்.

சந்தைகளை சென்றடையும் விவசாயிகள், சுற்றுலாப்பயணிகள் என அனைவருக்கும் உகந்த சாலைகள் கிடைக்கும்.

புனிதமான மதுரை மண்ணிற்கு வந்ததை மிகப்பெரிய கவுரவமாக பார்க்கிறேன். 2014ம் ஆண்டு முதல் 4,000 கி.மீக்கு தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. தேசிய சாலைகளை மேம்படுத்துவதன் மூலம் ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு அதிக நிதி வழங்கி உள்ளது. தமிழ்நாட்டிற்கான சாலை திட்டங்களில் மத்திய அரசு அதிக முதலீடு செய்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை பல சாதனைகளை புரிந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 9 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.880 கோடி, பாஜக ஆட்சியில் ரூ7600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதால் 1,300 கி.மீக்கு அதிகமாக ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com