மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ- கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காய்ந்த புற்கள் மற்றும் மரங்களால் தீ வேகமாக பரவி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ- கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு
Published on

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுங்கான்டை மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

தீ வேகமாக பரவி வருவதால் மலை அடிவாரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவித்து, மாணவிகளை கல்லூரி நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், காய்ந்த புற்கள் மற்றும் மரங்களால் தீ வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com