நிதிஷ்குமாரின் கதி எடப்பாடி பழனிச்சாமிக்கு நடக்காதா? - திருமாவளவன் #EPS

ஜெயலலிதா இல்லாமலேயே 65-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதுதனித்து நின்றாலே அதிமுகவின் வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும்.
நிதிஷ்குமாரின் கதி எடப்பாடி பழனிச்சாமிக்கு நடக்காதா? - திருமாவளவன் #EPS
Published on

கடந்த ஆண்டு தேர்தலில் என்டிஏ கூட்டணியில் வென்ற நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பொறுப்பேற்றார்.

பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற 4 மாதங்களே ஆன நிலையில் பதவியில் இருந்து விலகுவதை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார்.

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட நிதிஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில்,சென்னை எழும்பூரில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "அண்ணன் எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்கள். எம்ஜிஆர் ஜெயலலிதாவும் கட்டிக் காத்த திராவிட இயக்கமான அதிமுகவை கரைய விட்டு விடாதீர்கள், காப்பாற்றுங்கள். தனித்து நின்றாலே அதிமுகவின் வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும்.

ஜெயலலிதா அம்மையார் இல்லாமலேயே 65-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இதை முன்பே நான் கூறினேன். தற்போது, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்தால் அவரால் அந்த பதவியில் அமர முடியுமா? நிதீஷ்குமாரின் கதி எடப்பாடி பழனிசாமிக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com