பாங்கு சத்தம் கேட்கவில்லை.. நாகை மக்களிடம் மன்னிப்பு கேட்ட இ.பி.எஸ்.

கடன் வாங்கும் மாநிலமாக மாற்றிவிட்டார் ஸ்டாலின். பிறக்கும் குழந்தைகூட ஒன்றரை லட்சம் ரூபாய் கடனுடன்தான் பிறக்கிறது.
பாங்கு சத்தம் கேட்கவில்லை.. நாகை மக்களிடம் மன்னிப்பு கேட்ட இ.பி.எஸ்.
Published on

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "4 ஆண்டுகளாக திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்ற நாடகம் அரங்கேற்றம் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாக சென்று கட்சியில் சேர சொல்லி கேட்கிறார்கள். கடன் வாங்கும் மாநிலமாக மாற்றிவிட்டார் ஸ்டாலின். கடன் வாங்குவதில்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பிறக்கும் குழந்தைகூட ஒன்றரை லட்சம் ரூபாய் கடனுடன்தான் பிறக்கிறது. கொரோனா காலத்தில்கூட விலைவாசி உயராமல் அதிமுக ஆட்சியில் பார்த்துக் கொண்டோம்" என்று கூறினார்.

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதை அறிவிக்கும் பாங்கு ஒலித்த சத்தம் கேட்காமல் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மக்களிடம் உரையாற்றினார்.

பாங்கு ஓதப்பட்டு முடிந்த பிறகு தொண்டர்கள் அவரிடம் நினைவு படுத்தியதை அடுத்து மேடையிலேயே எடப்பாடி பழனிசாமி மன்னிப்புக் கேட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com