சென்னையில் பிரதமர் மோடியை இன்று இரவு சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி

சென்னை வரும் அவர் கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று இரவு தங்குகிறார்.கூட்டணி கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் பிரதமர் மோடியை இன்று இரவு சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி இன்று இரவு வருகிறார். சென்னை வரும் அவர் கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று இரவு தங்குகிறார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது பிரதமரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.

இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் பங்கேற்க இருக்கிறார்கள்.

இதே போன்று பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com