ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் - ED அறிவிப்பு

ஆண்டாள் ஆறுமுகத்திற்கு தொடர்புடை 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்தது.ரூ.912 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன
ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் - ED அறிவிப்பு
Published on

சென்னையில் தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆண்டாள் ஆறுமுகத்திற்கு தொடர்புடைய 3 இடங்களில் சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை செய்தது. சோதனையில் ரூ.1000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் ஆவணங்கள், அசையா சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.912 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com