ஒட்டுகேட்பு கருவி விவகாரம் - ராமதாஸ் இல்லத்தில் போலீசார் விசாரணை

ஒட்டு கேட்கும் கருவி லண்டனில் இருந்து வந்துள்ளது.ராமதாஸ் இல்லத்தில் ஒட்டு கேட்கும் கருவியை வைத்தது யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
ஒட்டுகேட்பு கருவி விவகாரம் - ராமதாஸ் இல்லத்தில் போலீசார் விசாரணை
Published on

திண்டிவனம்:

கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிருபர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ் தனது வீட்டில் ஒட்டு கேட்பு கருவி இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் மற்றும் பா.ம.க.வினர் கிளியனூர் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.

இந்த நிலையில் இன்று சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் தலைமையில் கிளியனூர் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் 5-க்கும் மேற்பட்ட போலீசார் டாக்டர் ராமதாஸ் வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாக்டர் ராமதாசிடம் ஒட்டு கேட்பு கருவி பற்றி அவர்கள் கேட்டு வருகின்றனர். இதையடுத்து அங்குள்ள ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். சுமார் அரைமணி நேரத்துக்கு மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com