திருவெறும்பூரில் அனைத்து அதிவிரைவு ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன்- துரை வைகோ

திருவெறும்பூர் பகுதி பல கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ள இடம்.நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
திருவெறும்பூரில் அனைத்து அதிவிரைவு ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன்- துரை வைகோ
Published on

தஞ்சாவூர்:

திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் அதிவிரைவு ரெயில் இன்று முதல் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு புறப்பட்ட அந்த ரெயிலில் திருவெறும்பூரில் இருந்து திருச்சி எம்.பி. துரை வைகோ ஏறி தஞ்சையில் வந்து இறங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவெறும்பூர் பகுதி பல கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ள இடம். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருச்சியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பலமுறை மத்திய ரெயில்வே அமைச்சர், ரெயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தேன்.

அதன் பயனாக இன்று முதல் திருச்சி-தாம்பரம் ரெயில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு வந்து நடைமுறைக்கு வந்தது. இது திருச்சி மக்களுக்கு மட்டுமல்ல எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. இந்த சிறப்பு ரெயில் போலவே அனைத்து அதிவிரைவு ரெயில்களும் திருவெறும்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com