ஜனவரி இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் டபுள் டக்கர்

அமெரிக்க வாழ் தமிழர்கள் இணைந்து தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்காக டபுள் டக்கர் பேருந்தை வழங்கியுள்ளனர். இம்மாத இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு டபுள் டெக்கர் பேருந்து வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
ஜனவரி இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் டபுள் டக்கர்
Published on

சென்னை:

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கவும் சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் ஏறி சென்னை மாநகர சாலைகளின் இருபுறமும் உள்ள அழகை ரசித்தபடியே பயணம் செய்தவர்களின் அனுபவம் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி இந்த பஸ் சேவை தொடங்கியது.

முதற்கட்டமாக சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு டபுள் டக்கர் பஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிகப்பு நிறம் கொண்ட டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்தது.

இந்நிலையில் அமெரிக்க வாழ் தமிழர்கள் இணைந்து தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்காகப் புதிய குளிர்சாதன வசதி கொண்ட டபுள் டக்கர் (இரட்டை அடுக்கு) பேருந்தை வழங்கியுள்ளனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அமெரிக்கப் பயணத்தின் போது விடுத்த வேண்டுகோளை ஏற்று, அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் இந்தப் பேருந்துக்கான நிதியைத் திரட்டி வழங்கினர்.

இந்த பேருந்து சேவைக்கு தயாராக உள்ளது. இதனால் இம்மாத இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு டபுள் டெக்கர் பேருந்து வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்தப் பேருந்து சென்னை நகரின் முக்கியச் சுற்றுலாத் தலங்களுக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com