பணம் நமக்கு, பிரச்சனை மக்களுக்கு என்பது தான் தி.மு.க.-வின் மாடல்: பிரதமர் மோடி

திமுகவின் சில்லறை அரிசயலால் ஏழை மக்கள் ஏன் அவதிப்பட வேண்டும்?மத்திய அரசு நிதி கொடுத்தாலும் திமுக அரசு நல்லது செய்யாது, நல்லது செய்யவும் விடாது.
பணம் நமக்கு, பிரச்சனை மக்களுக்கு என்பது தான் தி.மு.க.-வின் மாடல்: பிரதமர் மோடி
Published on

மதுரையில் இன்று மாலை நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை சொந்தங்களே நீங்கள் என் மீது பொழியும் பேரன்பு மலேசியாவில் இந்தியர்கள் என் மீது பொழிந்த பேரன்மை நினைவுபடுத்துகிறது.

நாவில் இனிக்கும் தமிழுக்கும், நாசியில் இனிக்கும் மல்லிகைக்கும் பெயர்போனது மதுரை மண்.

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என சிலர் கனவு காண்கிறார்கள். ஆனால், அவர்களின் கனவு பலிக்காது.

திமுகவின் கனவுக்கோட்டை கானல் நீராக மாறிவிடும், இந்த தேர்தல் மாற்றத்தை கொண்டுவரும் தேர்தல்.

வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

திமுக ஆட்சியை வழியனுப்பி வைப்பதற்கு தமிழ்நாடு மக்கள் தயாராகிவிட்டனர்.

வரும் தேர்தல் திருப்புமுனையாக அமையும். திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

மாஃபியா போல் தமிழ்நாட்டை திமுக கொள்ளை அடிக்கிறது.

மோசமான சாலை, அசுத்தமான குடிநீர் இதைத்தான் திமுக அரசு கொடுத்தது.

ஊழல் காரணமாக மதுரை மாநகர் மேயரின் பதவியே பறிபோய் உள்ளது. இதுதான் திமுகவின் ஆட்சி.

25 ஆண்டுகளுக்கு பின் முழு மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சிக்கு வந்தும் கூட தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை.

மதுரை மக்கள் எம்ஜிஆருடன் நின்றார்கள் அதனால் மதுரையை திமுகவிற்கு பிடிக்கவில்லை. ஊழல் ஆட்சியா? என்டிஏ கூட்டணி ஆட்சியா? என்ன வேண்டும் என மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

திமுக அரசின் ஊழல் ஆட்சியால் லட்சக்கணக்கான ஏழைக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசால் ஏழைகளுக்கான 3 லட்சம் வீடுகள் கட்டும் பணி முடங்கி உள்ளது. திமுகவின் சில்லறை அரிசயலால் ஏழை மக்கள் ஏன் அவதிப்பட வேண்டும்?

மத்திய அரசு நிதி கொடுத்தாலும் திமுக அரசு நல்லது செய்யாது, நல்லது செய்யவும் விடாது.

பணம் நமக்கு, பிரச்சனை மக்களுக்கு என்பது தான் திமுகவின் மாடல்.

தமிழ்நாட்டின் உரிமைக்காக வாய் கிழிய பேசும் திமுக மாநில மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com