மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக நீட் பிரச்சினையை திமுக எழுப்புகிறது: அமித் ஷா

திமுக அரசு சானாதனம், மும்மொழிக் கொள்ளை, தொகுதி மறுசீரமைப்பு போன்ற பிரச்சினைகள் எழுப்பி கொண்டிருக்கிறது.மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே நீட் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினைகளை பயன்படுத்துகிறது.
மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக நீட் பிரச்சினையை திமுக எழுப்புகிறது: அமித் ஷா
Published on

மத்திய உள்துறை அமைச்சர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி 2026 தேர்தல் சந்திக்கும் என்றார். இதன்மூலம் அதிமுக- பாஜக கூட்டணியை உறுதி செய்தார்.

ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்ல என்றார்.

மேலும், நீட் தேர்வு பிரச்சனையை திமுக தொடர்ந்து எழுப்பி வருகிறதே? என்ற கேள்விக்கு அமித் ஷா "திமுக அரசு சானாதனம், மும்மொழிக் கொள்ளை, தொகுதி மறுசீரமைப்பு போன்ற பிரச்சினைகள் எழுப்பி கொண்டிருக்கிறது.

ஊழல், மோசடி போன்ற முக்கிய பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக இது போன்ற பிரச்சனைகளை எழுப்பி வருகிறது.

மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே நீட் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினைகளை பயன்படுத்துகிறது" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com