SIR நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. மனு

SIR நடைமுறை நாளை தமிழ்நாட்டில் தொடங்க உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தை திமுக நாடியது.தமிழ்நாட்டில் சீராய்வு மேற்கொள்வதை ஏற்க முடியாது என்று திமுக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SIR நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. மனு
Published on

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

SIR நடைமுறை நாளை தமிழ்நாட்டில் தொடங்க உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தை திமுக நாடியது.

SIR நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் சீராய்வு மேற்கொள்வதை ஏற்க முடியாது என்று திமுக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தில் செய்யப்படும் பணியால் பலர் தங்கள் வாக்குகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், பீகார் SIR தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வராத நிலையிலும், தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையிலும் SIR நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com