வரும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Published on

சென்னை:

தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கூட்டத்தில் தேர்தல் பணி, கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படாதது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com