வருண் குமார் ஐபிஎஸ் தொடர்ந்த வழக்கிற்கு தடைகோரி சீமான் மனு: 20ஆம் தேதி இறுதி விசாரணை

சீமான் மீதான வருண் குமார் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு.சீமான் மனு மீதான இறுதி விசாரணை வருகிற 20ஆம் தேதி நடைபெறும்.
வருண் குமார் ஐபிஎஸ் தொடர்ந்த வழக்கிற்கு தடைகோரி சீமான் மனு: 20ஆம் தேதி இறுதி விசாரணை
Published on

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கிற்கு தடைகோரி சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து சீமானுக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

இந்த தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீட்டித்துள்ளது. மேலும், வழக்கின் இறுதி விசாரணை வரும் 20ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com