இன்று மாலை கரையை கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

இலங்கை பொத்துவில்லுக்கு 200 கி.மீ. தொலைவில் நிலவும் காற்றழுத்தம் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை.
இன்று மாலை கரையை கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
Published on

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும்.

இலங்கை பொத்துவில்லுக்கு 200 கி.மீ. தொலைவில் நிலவும் காற்றழுத்தம் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறக் கூடும் என முன்பு கூறியிருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது.

நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com