வரும் ஆகஸ்ட் 3ம் தேதி மாடு மேய்க்கும் போராட்டம்- சீமான் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள மேய்ச்சல், தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும்.கால்நடைகளை மேய்ப்பதற்கு பல இடங்களில் வனத்துறை தடை விதித்துள்ளதைக் கண்டித்து போராட்டம்.
வரும் ஆகஸ்ட் 3ம் தேதி மாடு மேய்க்கும் போராட்டம்- சீமான் அறிவிப்பு
Published on

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில், மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெறும் என்றும், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மாடு மேய்ப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேனி அடப்பாறையில் ஆக.3ம் தேதி வரும் ஆகஸ்ட் 3ம் தேதி மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

கால்நடைகளை மேய்ப்பதற்கு பல இடங்களில் வனத்துறை தடை விதித்துள்ளதைக் கண்டித்து மாடு மேய்க்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள மேய்ச்சல், தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை சீமான் நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com