டிக்கெட்டுக்கு 10% தள்ளுபடி திட்டத்தை ரத்து செய்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் - பயணிகள் அதிர்ச்சி

மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை நேரடியாகவும் வழியாகவும் ஆன்லைன் வழியாகவும் பெறலாம்.மெட்ரோ டிக்கெட்டுகளை காகித முறையில் வாங்கினால் 10% தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது.
டிக்கெட்டுக்கு 10% தள்ளுபடி திட்டத்தை ரத்து செய்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் - பயணிகள் அதிர்ச்சி
Published on

சென்னை மெட்ரோ ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பயணிகள் மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை நேரடியாகவும் வழியாகவும் ஆன்லைன் வழியாகவும் பெறலாம். மேலும் மெட்ரோ கார்டுகளில் ரீசார்ஜ் செய்தும் பயணம் மேற்கொள்ளலாம்.

மெட்ரோ ரெயிலில் 20 மற்றும் அதற்கு மேற்பட்ட மெட்ரோ டிக்கெட்டுகளை காகித முறையில் வாங்கினால் 10% தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த சலுகை மார்ச் 1 ஆம் தேதி (1.3.2025) முதல் திரும்பப் பெறப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் முறையில் பயணிகள் டிக்கெட் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாகCMRL மொபைல் ஆப் மூலம் QR முறையில் குரூப் டிக்கெட் எடுத்தால் 20% தள்ளுபடி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com