கல்விதான் உயிரினும் மேலானது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.தாய் உயிரிழந்த நிலையிலும் சுனில்குமார் என்ற 12-ம் வகுப்பு மாணவர் பொதுத்தேர்வை எழுதியுள்ளார்.
கல்விதான் உயிரினும் மேலானது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழகத்தில் இத்தேர்வினை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவர்கள் எழுதுகின்றனர்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தாய் உயிரிழந்த நிலையிலும் சுனில்குமார் என்ற 12-ம் வகுப்பு மாணவர் பொதுத்தேர்வை எழுதியுள்ளார். இதனை சுட்டிக்காட்டி சில புகைப்படங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இதுதான் தமிழ்ச் சமூகம்!

கல்விதான் நம் உயிரினும் மேலானது!

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்

சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!. என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com