

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவதூறுகளை கூறி உள்ளார் அமித் ஷா.
* அமித்ஷாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
* தமிழ்நாட்டில் இல்லாத பிரச்சனைகளை உருவாக்கி அவதூறுகளை பரப்புகிறார்கள்.
* அமித் ஷாவா இல்லை அவதூறு ஷாவா என நினைக்கும் அளவிற்கு உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி உள்ளார்.
* இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக துளியும் உண்மை இல்லாமல் குற்றம்சாட்டுகிறார்.
* உள்துறை அமைச்சர் அமித் ஷா உண்மைக்கு புறம்பாக குற்றம்சாட்டுவது அவரது பதவிக்கு அழகல்ல.
* தமிழகத்தில் கலவரம் செய்துவிடலாம் என்ற எண்ணம் நான் இருக்கும் வரை நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.