தரமான காற்று கிடைக்கும் நகரங்களில் இந்திய அளவில் நெல்லைக்கு முதலிடம்

தூய்மையான காற்றின் தரத்தை அனுபவிக்கும் நகரங்களை எடுத்துக்காட்டுகிறது.இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்று தரக் குறியீட்டு தரவை வெளியிட்டுள்ளது.
தரமான காற்று கிடைக்கும் நகரங்களில் இந்திய அளவில் நெல்லைக்கு முதலிடம்
Published on

நெல்லை:

இந்தியாவில் காற்றின் தரம் ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் சவாலாக இருக்கிறது. எனினும் பல்வேறு நகரங்களில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகளுடன், இந்தியா முழுவதும் உள்ள நகரங்களை மதிப்பிடுவது அவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. இந்நிலையில் 2025-ல் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்று தரக் குறியீட்டு தரவை வெளியிட்டுள்ளது.

இந்த அட்டவணை தற்போது சிறந்த மற்றும் தூய்மையான காற்றின் தரத்தை அனுபவிக்கும் நகரங்களை எடுத்துக்காட்டுகிறது. அதில் இந்திய நகரங்களில் மிகச்சிறந்த காற்றின் தரம் இருக்கும் நகரமாக நெல்லை திகழ்கிறது.

தமிழ்நாட்டின் நெல்லை முதல் இடத்திலும், அருணாச்சல பிரதேசத்தின் நாகர் லகுன் 2-வது இடத்தையும், கர்நாடகாவின் மடிக்கேரி பகுதி 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. தஞ்சாவூர் 5-வது இடத்தை பிடித்துள்ளது. காற்றின் தரம் சிறப்பாக இருக்கும் மாநிலங்களில் கர்நாடகாவின் கப்பல், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மற்றும் கேரளாவின் கண்ணூர் நகரமும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காற்றின் தரம் மிக மிக மோசமாக இருக்கும் நகரத்தில் முதல் இடத்தை இந்திய தலைநகரான புது டெல்லி பிடித்துள்ளது. மோசமான காற்று தரம் உள்ளதாக 2-வது இடத்தை உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத்தும், 3-வது இடத்தினை மேகாலயாவின் பிரின் ஹேட் நகரமும் பிடித்துள்ளன. சண்டிகர், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை காற்றின் தரம் மோசமாக உள்ள முதல் 10 மாநில பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com