சர்வதேச போட்டிக்கு அனுப்புவதற்கான ஏவுதளம்தான் முதலமைச்சர் கோப்பை கேம்ஸ்- உதயநிதி ஸ்டாலின்

2023-ல் சுமார் 4 லட்சம் வீரர்கள் கலந்து கொண்டனர்.2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
சர்வதேச போட்டிக்கு அனுப்புவதற்கான ஏவுதளம்தான் முதலமைச்சர் கோப்பை கேம்ஸ்- உதயநிதி ஸ்டாலின்
Published on

2025ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா கொண்டாட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. 5 பிரிவுகளில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகம் விளையாட்டுத்துறையில் நம்பர் ஒன் இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக, கலைஞர் முதல்வாராக இருக்கும்போது விளையாட்டுத்துறைக்கென தனி அமைச்சகத்தை முதன்முதலாக அமைத்தார்.

கலைஞர் லட்சியத்தை அடையும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு விளையாட்டிலும் நம்பர் ஒன் இடத்தை அடைந்து கொண்டிருக்கிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டுதான் 2025 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள். விளையாட்டு புரட்சியை, மாபெரும் இயக்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

2023-ல் சுமார் 4 லட்சம் வீரர்கள் கலந்து கொண்டனர். 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதிலிருந்து போட்டிக்கான வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் புரிந்து கொள்ளலாம். விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதுதான் இதனுடைய ஒரே நோக்கம்.

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிக்கு அனுப்புவதற்கான ஏவுதளம்தான் (Launching Pad) இந்த முதலமைச்சர் கோப்பை கேம்ஸ். பயிற்சியும், உறுதியும் இருந்தால் நிச்சயம் சாதித்து காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கிறது. அனைத்து உதவிகளையும் செய்ய முதலமைச்சர் தயாராக இருக்கிறார்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com