டெல்லிக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் 10-வது நிர்வாக குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லிக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

நிதி ஆயோக் 10-வது நிர்வாக குழுக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் 10-வது நிர்வாக குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை சந்திக்கிறார். மேலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய பிரதமரை சந்தித்து வலியுறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com