சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம் - த.வெ.க.வை அழைத்த பா.ம.க!

உறுதியாகும் தவெக-பாமக கூட்டணி?திமுக தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம் - த.வெ.க.வை அழைத்த பா.ம.க!
Published on

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாமக நீண்டநாட்களாக வைத்து வருகிறது. இதனை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி பாகம மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்க உள்ளது.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தவெகவிற்கு அழைத்து விடுத்துள்ளது பாமக. இதற்கான அழைப்பு கடிதத்தை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு இன்று வழங்கினர்.

மேலும் தவெக சார்பில் விஜய் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பலரும் தவெக-பாமக கூட்டணி அமைய அதிக வாய்ப்புகள் உருவாகி வருவதாக கருத்துகள் தெரிவித்து வருகின்றன.  

டிசம்பர் 17 அன்று சென்னை மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான திமுகவைத் தவிர்த்து மற்ற அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் பாமக அழைப்பு அனுப்பியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com