அரசியலில் திடீர் திருப்பம்: அன்புமணி ராமதாசுடன் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சந்திப்பு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.தற்போது கூட்டணி கணக்குகளில் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.
அரசியலில் திடீர் திருப்பம்: அன்புமணி ராமதாசுடன் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சந்திப்பு
Published on

சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போது கூட்டணி கணக்குகளில் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.

அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பா.ஜ.க. விரும்புகிறது. அதற்கான முயற்சிகளையும் பா.ஜ.க. முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசை பனையூரில் உள்ள இல்லத்தில் பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவரும், தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா எம்.பி. நேற்று சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், டாக்டர் அன்புமணி ராமதாசிடம் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாகத் தெரிகிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க. இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

டாக்டர் அன்புமணி ராமதாசை பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சந்தித்துப் பேசியது அரசியலில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com