செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு வரப்போவதை அறிந்து பல கட்சிகள் பதறின - அருண்ராஜ்

இன்றைய நாள் தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்.2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி பெற்று, விஜய் தலைமையில் ஆட்சி அமையும்.
செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு வரப்போவதை அறிந்து பல கட்சிகள் பதறின - அருண்ராஜ்
Published on

பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறியதாவது:

* அரை நூற்றாண்டு அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.

* இன்றைய நாள் தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்.

* செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு வரப்போவதை அறிந்து பல கட்சிகள் பதறின.

* 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி பெற்று, விஜய் தலைமையில் ஆட்சி அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com