'ஆட்சிக்கு வரமாட்டோம் எனும் நம்பிக்கையில் ரூ.10 ஆயிரம் அறிவிப்பு' - திருமாவளவன்!

இந்த அறிவிப்பு களத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்
'ஆட்சிக்கு வரமாட்டோம் எனும் நம்பிக்கையில் ரூ.10 ஆயிரம் அறிவிப்பு' - திருமாவளவன்!
Published on

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று (பிப்.24) வெளியிட்டார்.

அதில், அதிமுக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத்தொகை ஒருமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது "உதவித்தொகை" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் இந்த பெரும்தொகை அறிவிப்பு தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன்,

'இது ஒரு தேர்தல் வித்தை. தாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று அவர்கள் (அதிமுக) நம்புகிறார்கள், அதனால்தான் இவ்வளவு பெரிய தொகையை அறிவித்திருக்கிறார்கள். திமுக ஏற்கனவே மக்களுக்காகப் பல நலத்திட்டங்களை அறிவித்து, அவை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இப்போது அதிமுகவும் தங்கள் வெற்றிக்காகப் பல திட்டங்களை அறிவித்துள்ளது. இது களத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்" என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com