ஒட்டுமொத்த தி.மு.க. கூட்டமும் மோசமானது, அநாகரீகமானது- பொன்முடிக்கு அண்ணாமலை கண்டனம்

பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பான வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்து தர்மத்தின் மீது தி.மு.க.வின் இடைவிடாத தாக்குதல்கள் பதிலளிக்கப்படாமல் கடந்து போகாது.
ஒட்டுமொத்த தி.மு.க. கூட்டமும் மோசமானது, அநாகரீகமானது- பொன்முடிக்கு அண்ணாமலை கண்டனம்
Published on

சென்னை:

கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில், பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாகவும், சைவ, வைணவ மதத்தை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகி உள்ளது. பொன்முடியின் பேச்சுக்கு தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், தமிழக பா.ஜ.க., பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இதுதான் தமிழ்நாட்டில் தி.மு.க.வின் அரசியல் பேச்சுக்களின் தரம் என பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பான வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், எக்ஸ் தள பக்கத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

இதுதான் தமிழ்நாட்டில் திமுகவின் அரசியல் பேச்சுக்களின் தரம். திரு. பொன்முடி ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சராகவும், தற்போது வனத்துறை மற்றும் காதி அமைச்சராகவும் இருந்தார். தமிழக இளைஞர்கள் இந்த அசுத்தத்தை பொறுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறதா? இந்த அமைச்சர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தி.மு.க. கூட்டமும் மோசமானது மற்றும் அநாகரீகமானது.

இவ்வளவு அவமானகரமான கூட்டத்தை வழிநடத்தியதற்காக, வெட்கப்பட்டு தலையை குனிந்து கொள்ளுங்கள், திரு. மு.க.ஸ்டாலின். இன்று அவரை ஒரு கட்சிப் பதவியில் இருந்து நீக்குவதன் மூலம், மக்கள் முன்னேறுவார்கள் என்று தி.மு.க. நினைத்தால், துரதிர்ஷ்டவசமாக அது தவறான ஒன்று தான்.

இந்து தர்மத்தின் (சைவம் & வைணவம்) மீது தி.மு.க.வின் இடைவிடாத தாக்குதல்கள் பதிலளிக்கப்படாமல் கடந்து போகாது. எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள், திரு. மு.க. ஸ்டாலின்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com