ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கோட்டூர் சண்முகம் வட்ட செயலாளர் என்ற முறையில் விழாவுக்கு அழைப்பு விடுப்பதற்காக பேசினார்.எனக்கும் ஞானசேகரனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்ல என்று எல்லோருக்கும் தெரியும். ஒருமுறை கூட போனில் பேசியது இல்லை.
ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Published on

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. மாணவியை மிரட்டும்போது சார் என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தியதாக செய்திகள் வெளியானது. இதனால் யார் அந்த சார்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

ஆனால் ஞானசேகரன் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பில் கூறப்பட்டு, நீதிமன்றத்தில் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. திமுக-வைச் சேர்ந்த சண்முகம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோருடன் ஞானசேகரன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை என மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியின் இது தொடர்பாக கூறியதாவது:-

* மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனையை அனுபவிக்கும் ஞானசேகரனிடம் பேசியதில்லை.

* கோட்டூர் சண்முகம் வட்ட செயலாளர் என்ற முறையில் விழாவுக்கு அழைப்பு விடுப்பதற்காக பேசினார்.

* எனக்கும் ஞானசேகரனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்ல என்று எல்லோருக்கும் தெரியும். ஒருமுறை கூட போனில் பேசியது இல்லை.

* மழை வெள்ளத்தின்போது நான், துணை மேயர் மற்றும் ஆலுவலர்களும் சென்றபோது சண்முகம் அவரது வீட்டு அருகே வைத்து காலை உணவு சாப்பிட வைத்தார். அப்போது அவருடன் ஒரு போட்டோ எடுத்ததை தவிர, வேறு எந்த தொடர்பும் இல்லை.

* சண்முகம் எனக்கு போன் செய்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதற்கு நான் பலமுறை விளக்கம் அளித்துவிட்டேன். சண்முகமும் நானும் பேசிய ஆடியோவை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com