கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் கூட்டணி கட்சிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா?

மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா? அல்லது புறக்கணிப்பாரா?இன்று தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் கூட்டணி கட்சிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா?
Published on

சென்னை:

வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டு உள்ளன.

செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்)

தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதனை கண்டிக்கும் வகையில் கவர்னரின் குடியரசு தின வரவேற்பு தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பார்கள்.

பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)

அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடு களையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக் காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் கவர்னராக நீடிக்கிற தகுதியை இழந்து விட்டார். ஆகவே கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு)

சட்டசபையில் நிறை வேற்றி அனுப்பும் மசோ தாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போடுவது, பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் மாநில உரிமையை மறுத்து, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான சிந்தனைகளை கவர்னர் திணித்து வருகிறார். எனவே கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி புறக்கணிக்கிறது.

கு.கா.பாவலன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர்)

தமிழ்நாட்டிற்கு கவர்னராக வருகின்றவர்கள் மாநில சுயாட்சி நிலைப் பாட்டிற்கும், இருமொழி கொள்கைக்கும் எதிராகவே செயல்பட்டு வருகின்றனர்.

ஆகவே மக்களின் நலன் கருதி கொள்கை அளவில் கவர்னரோடு முரண் நடவடிக்கைகளில் தலைவர் திருமாவளவன் தலை மையில் வி.சி.க. ஈடுபட்டு வருவதால் கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்.

(மனித நேய மக்கள் கட்சி)

கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கிறது. சட்ட மன்றத்தில் தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்துவது, சட்டமன்றத்தின் மரபைப் பேணாமல் வெளி நடப்பு செய்வது பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வது என்று தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு விரோத மாக நடந்து கொண்டிருக்கும் கவர்னரின் செயல்பாடு களுக்கு எங்களின் எதிர்ப்பை பதிவு செய்கிறோம்.

கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா? அல்லது புறக்கணிப்பாரா? என்பது இன்று தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com