அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 20 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அபிசித்தருக்கு சொகுசு கார் பரிசு

கடந்தாண்டு இதே ஜல்லிக்கட்டு அரங்கில் நடந்த போட்டியிலும் அபிசித்தர் முதலிடம் பிடித்திருந்தார்14 காளைகளை அடக்கி பொதும்பு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் 2 ஆம் இடம் பிடித்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 20 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அபிசித்தருக்கு சொகுசு கார் பரிசு
Published on

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறுகிறது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் துவங்கிய ஜல்லிக்கட்டு, மாட்டுப் பொங்கல் தினத்தில் பாலமேட்டில் நடைபெற்றது.

அந்த வரிசையில், உலகளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று துவங்கியது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 989 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, 490 காளையர்கள் களம் கண்டனர்.

9 சுற்றுகளாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பூவந்தி பகுதியை சேர்ந்த அபிசித்தர் 20 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அபிசித்தருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி சார்பில் சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு, ஹூட்சன் தமிழ் இருக்கை வழங்கும் நாட்டு பசுவும் கன்றும் கூடுதல் பரிசாக வழங்கப்பட்டது. .

கடந்தாண்டு இதே ஜல்லிக்கட்டு அரங்கில் நடந்த போட்டியிலும் அபிசித்தர் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

13 காளைகளை அடக்கி பொதும்பு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் 2 ஆம் இடம் பிடித்தார். அவருக்கு ஆட்டோ பரிசாக வழங்கப்பட்டது.

மடப்புரம் விக்னேஷ் 10 காளைகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்தார். இவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. ஏனாதி அஜய் 9 காளைகளை அடக்கி 4 ஆம் இடம் பிடித்தார். அவருக்கு TVS XL பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட சேலம் பாகுபலி மாட்டின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com