இங்கிலாந்து உடனான ஒப்பந்தம் தமிழகத்திற்கு உத்வேகம்- பிரதமர் மோடி

ஆபரேசன் சிந்தூரின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலத்தை கண்கூடாக கண்டிருப்பீர்கள்.தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இங்கிலாந்து உடனான ஒப்பந்தம் தமிழகத்திற்கு உத்வேகம்- பிரதமர் மோடி
Published on

தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி ரூ.4,900 பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, வணக்கம் என்று தமிழில் சொல்லி தனது சிறப்புரையை பிரதமர் மோடி தொடங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வளர்ச்சியின் புதிய மையப்புள்ளியாக தமிழகத்தையும், தூத்துக்குடியையும் உருவாக்கும்.

ஆழ்கடல் பகுதியில் சுதேசி கப்பல்களை செலுத்தி ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டவர் வ.உ.சிதம்பரம் பிளளை

வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோன் ஆகியோர் சுதந்திரமான பாரதம் என்ற கனவை உருவாக்கினார்கள்.

கடந்த ஆண்டு தூத்துக்குடியின் முத்துக்களை பில்கேட்ஸ்க்கு பரிசாக அளித்தேன்.

பாண்டிய நாட்டின் சுத்தமான முத்துக்கள் உலக பொருளாதாரத்தின் அடையாளமாக இருந்தன.

இங்கிலாந்து உடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்திற்கு உத்வேகம். புதிய ஒப்பந்தம் மூலம் இங்கிலாந்தில் விற்பனை ஆகும் 99 சதவீத இந்திய பொருட்களின் விலை குறையும்.

இங்கிலாந்து உடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்.

ஆபரேசன் சிந்தூரின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலத்தை கண்கூடாக கண்டிருப்பீர்கள்.

ஆபரேசன் சிந்தூரில் இந்தியா தயாரிப்பு தளவாடங்கள் பெரும் பங்கு வகித்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களால் எதிரிகள் பதுங்கு குழுகள் மண்ணோடு மண்ணானது.

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் 20 லட்சம் பணிகளை கையாளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இன்று திறக்கப்பட்ட சாலை கட்டமைப்பு மூலம் டெல்டா மாவட்டங்கள் சென்னையுடன் இணைக்கப்படுகிறது. ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் டெல்டா மாவட்டங்களை சென்னையோடு இணைக்கும்.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு போடப்பட்ட புதிய சாலையால் வர்த்தகம், வேலைவாய்ப்புக்கான புதிய பாதையை திறக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com