பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டம்

தங்களது ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டதாக அதிமுக தெரிவித்தது.போராட்டத்தில் பாஜக, அமமுக, கொங்கு இளைஞர் பேரவை, புரட்சி பாரதம் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டம்
Published on

கல்லூரி மாணவரகள் 10 லட்சம் பேருக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வலியுறுத்தி சென்னையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக ஆட்சியில் மாணவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக லேப்டாப் வழங்குவதால் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

தங்களது ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டதாக அதிமுக தெரிவித்தது.

இந்த போராட்டத்தில் பாஜக, அமமுக, கொங்கு இளைஞர் பேரவை, புரட்சி பாரதம் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதற்கிடையே, இலவச லேப்டாப் திட்டத்தால் பயன்பெற்றவர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

இது ஒரு பக்கம் இருக்க, மதுரையில் மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் எனக் கூறி அதிமுக போராட்டம் நடத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com