எடப்பாடி பழனிசாமி தலைமையில் 31-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.2026 சட்டசபை தேர்தல் பணிகள் குறித்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் 31-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Published on

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வரும் 31-ந்தேதி காலை 10 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

2026 சட்டசபை தேர்தல் பணிகள் குறித்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com