தர்மபுரியில் நாட்டு வெடி வெடித்து 6 வயது சிறுமி உயிரிழப்பு

பொங்கல் விடுமுறையையொட்டி பூமாண்ட அள்ளி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்திருந்த சிறுமிக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது.பக்கத்து வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, அங்கிருந்த நாட்டு வெடியை தெரியாமல் மிதித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.
தர்மபுரியில் நாட்டு வெடி வெடித்து 6 வயது சிறுமி உயிரிழப்பு
Published on

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நாட்டு வெடி வெடித்து 6 வயது சிறுமி கவிநிலா உயிரிழந்துள்ளார்.

பொங்கல் விடுமுறையையொட்டி பூமாண்ட அள்ளி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்திருந்த சிறுமிக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது.

பக்கத்து வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, அங்கிருந்த நாட்டு வெடியை தெரியாமல் மிதித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு வாங்கி மீதம் இருந்து நாட்டு வெடியை மாடியின் மீது வைத்திருந்த நிலையில் விபரீதம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com