பொங்கலுக்கு முன்பு 1000 ஒப்பந்த செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திமுக ஆட்சிக்கு வந்த பின் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.ஒருவர் கூட இந்த துறையில் பாதிக்கப்படக் கூடாது என தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
பொங்கலுக்கு முன்பு 1000 ஒப்பந்த செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

பொங்கலுக்கு முன்பு 1000 ஒப்பந்த செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என மக்கள் நல சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:-

ஒப்பந்த செவிலியர்களுக்கு தொடர்ச்சியாக பணிநிரந்தரம் முதலை்மச்சரின் வழிகாட்டுதலின்படி செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்த பின் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மீதமுள்ள 8000க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றதை தொடர்ந்து, பொங்கலுக்கு முன்பு 1000 ஒப்பந்த செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.

ஒருவர் கூட இந்த துறையில் பாதிக்கப்படக் கூடாது என தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com