search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்

    • ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
    • தற்போது ஏரிக்கு நீர்வரத்து இல்லை. வெயிலும் அதிகரித்துள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி.

    இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த ஏரியால் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    ஏரிக்கு மேட்டூர் நீர், கீழணையில் இருந்து வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு நிரப்பப்படும். மழை காலங்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து காட்டாறுகள் மூலம் நீர் ஏரிக்கு தண்ணீர் வரும். தற்போது ஏரிக்கு நீர்வரத்து இல்லை. வெயிலும் அதிகரித்துள்ளது.

    இந்தச் சூழலில் சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 40.30 அடியாக உள்ளது.

    அதே நேரத்தில், தற்போது ஏரிக்கு நீர் வரும் 9 அடி உள்ள கீழணையில், 2.7 அடியாக குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.

    தற்போது சென்னைக்கு விநாடிக்கு 48 கனஅடியும், பாசனத்துக்கு விநாடிக்கு 100 கன அடியும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இது போல அனுப்பி வைக்கப்பட்டால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக சரிந்துவிடும். இதனால் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதை நிறுத்தும் நிலை ஏற்படும்.

    Next Story
    ×