கடவுள் ராமர் குறித்து வைரமுத்து சர்ச்சை பேச்சு - புதுச்சேரியில் பா.ஜ.க.வினர் போராட்டம்

புதுச்சேரியில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
கடவுள் ராமர் குறித்து வைரமுத்து சர்ச்சை பேச்சு - புதுச்சேரியில் பா.ஜ.க.வினர் போராட்டம்
Published on

மயிலாப்பூரில் கடந்த 8-ந்தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து பங்கேற்று பேசினார். அப்போது அவர், கடவுள் ராமரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது.

வைரமுத்து பேசியதாவது:- சீதையை இழந்த ராமர், புத்திசுவாதீனத்தை இழந்தார். புத்திசுவாதீனம் இல்லாதவர் செய்யும் குற்றம், குற்றம் கிடையாது என்று IPC கூறுகிறது. IPC-யில் கூறப்பட்டதை அன்றே கூறினார் கம்பர். ராமர் குற்றம் செய்திருந்தாலும் குற்றவாளி அல்ல என்று கம்பர் கூறுகிறார் என்றார்.

வைரமுத்துவின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவருக்கு எதிராக புதுச்சேரியில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com