புதுச்சேரியில் த.வெ.க. ஆட்சியை பிடிக்கும்- புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை

இங்கு கூடியுள்ள கூட்டம் தலைவர் விஜய்க்காக வந்த கூட்டம். வேலை நாட்களில் இவ்வளவு பேர் கூடியுள்ளார்கள் என்றால் அது த.வெ.க. தலைவர் விஜய்க்காக மட்டும் தான்.
புதுச்சேரியில் த.வெ.க. ஆட்சியை பிடிக்கும்- புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை
Published on

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மற்றும் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் இன்று நடைபெற்றது. புதுச்சேரியில் முதல் முறையாக விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் என்பதால் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் பொதுக்கூட்டம் என்பது மாநாடு போல் காட்சியளித்தது.

பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு முன்னதாகவே வந்த விஜய், சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக பிரசார வாகனத்தில் இருந்து வெளியே வரவில்லை. வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்த அவலநிலை ஏற்பட்டது.

இதன்பின் 11. 13 மணியளவில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இங்கு கூடியுள்ள கூட்டம் தலைவர் விஜய்க்காக வந்த கூட்டம். வேலை நாட்களில் இவ்வளவு பேர் கூடியுள்ளார்கள் என்றால் அது த.வெ.க. தலைவர் விஜய்க்காக மட்டும் தான்.

புதுச்சேரியில் தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி கண்டிப்பாக இருக்கும். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2026-ம் ஆண்டு விஜய் வருவார் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com