துணை ஜனாதிபதி தேர்தல்: பொறியாளர் ரஷீத் பாராளுமன்றம் சென்று வாக்களிக்க அனுமதி

58 வயது பொறியாளரான ரஷீத் மீது ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சட்டு உள்ளது.2024 மக்களவைத் தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லாவை ரஷீத் தோற்கடித்து எம்,பி ஆனார்.
துணை ஜனாதிபதி தேர்தல்: பொறியாளர் ரஷீத் பாராளுமன்றம் சென்று வாக்களிக்க  அனுமதி
Published on

செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் பொறியாளர் ரஷீத் வாக்களிக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வாக்களிக்க அனுமதி கோரிய ரஷீத்தின் மனுவை நேற்று நடந்த விசாரணையில் கூடுதல் அமர்வு நீதிபதி சந்தர் ஜீத் ஏற்றுக்கொண்டார். வாக்களிக்க நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கான செலவுகளை ரஷீத் ஏற்க வேண்டும் என்றும், அதற்காக அவர் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

58 வயது பொறியாளரான ரஷீத் மீது ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சட்டு உள்ளது.

2017 ஆம் ஆண்டு பயங்கரவாத நிதியுதவி வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமையால் (NIA) அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் 2019 முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடியே 2024 மக்களவைத் தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லாவை ரஷீத் தோற்கடித்து எம்,பி ஆனார்.

முன்னதாக, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை ரஷீத்துக்கு நீதிமன்றம் காவல் பரோல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com