போதை லட்டு கொடுத்து ஆசிரமத்தில் வீராங்கனையை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த தலைமை சாமியார்

இந்த அட்டூழியத்தை ஆபாசமாக வீடியோ எடுத்து வெளியிடுவதாக மிரட்டினர்.பாதிக்கப்பட்டவர் ஒரு காணொளியையும் சமர்ப்பித்தார்.
போதை லட்டு கொடுத்து ஆசிரமத்தில் வீராங்கனையை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த தலைமை சாமியார்
Published on

உத்தரப் பிரதேசத்தில் கோவிந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் 30 வயது தேசிய அளவிலான டேக்வாண்டோ தடகள வீராங்கனை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

புகாரின்படி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர், ஆசிரமத்தில் ஒரு கடை அமைக்க உதவுவதாக அந்த பெண்ணுக்கு உறுதியளித்தார்.

இதற்காக நான்காயிரம் ரூபாய் கேட்ட அவர், ஆசிரமத்தில் உள்ள சில செல்வாக்கு மிக்க நபர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதாகவும், அவர்கள் கடைக்கு இடம் தருவதாகவும் கூறினார். அவரது வார்த்தைகளை நம்பி பாதிக்கப்பட்ட பெண், ஜனவரி 28 அன்று அந்த முதியவருடன் ஆசிரமத்திற்குச் சென்றார்.

அங்கு போதைப்பொருள் கலந்த லட்டுவை சாப்பிடக் கொடுத்ததாகவும், அதைச் சாப்பிட்ட பிறகு சுயநினைவை இழந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.

பின்னர், அந்த முதியவர், ஆசிரமத்தின் தலைமை சாமியார் மற்றும் இரண்டு பேர் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், இந்த அட்டூழியத்தை ஆபாசமாக வீடியோ எடுத்து வெளியிடுவதாக மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

பயந்துபோன அவர், இறுதியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கடந்த வியாழக்கிழமை தெற்கு துணை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்த் நகர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு துணை ஆணையர் மகேஷ் குமார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் ஒரு காணொளியையும் சமர்ப்பித்தார். காணொளியில் காணப்படும் ஆசிரம அறையை சனிக்கிழமை ஆய்வு செய்தோம். நாங்கள் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம், மேலும் நடவடிக்கை எடுப்போம் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com