இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது.. கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

சுதந்திரத்தைப் பயன்படுத்தும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்ற நாடுகளில் முதலீடு செய்கின்றனசிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு புதிய தேசபக்தி தேவை.
இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது.. கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொழில்நுட்ப வேலைகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இந்தியர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

வாஷிங்டனில் நடந்த AI மாநாட்டில் பேசிய அவர், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

"நாம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும். அமெரிக்கர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அமெரிக்கர்கள் தாங்கள் கவனிக்கப்படவில்லை என்று உணர்கிறார்கள்.

நாட்டில் கிடைக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்ற நாடுகளில் முதலீடு செய்கின்றன. எனது நிர்வாகத்தின் போது இந்தக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன்" என்று தெரிவித்தார்.

பெரிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன. இந்தியர்களை வேலைகளில் அமர்த்துகின்றன என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும், "இங்குள்ள மக்களின் வாய்ப்புகளைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை. நீங்கள்  அமெரிக்கர்களை புறக்கணிக்கிறீர்கள்.  AI பந்தயத்தில் வெற்றி பெற, சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு புதிய தேசபக்தி தேவை. இங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் நாட்டை முதன்மைப்படுத்த வேண்டும்" என்று அவர் அழைப்பு விடுத்தார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com