உ.பி.யில் டிராக்டர் மீது லாரி மோதி கோர விபத்து.. 9 பக்தர்கள் உயிரிழப்பு - 42 பேர் படுகாயம்

சம்பவத்தின் போது டிராக்டர்-டிராலியில் 61 பக்தர்கள் இருந்தனர்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
உ.பி.யில் டிராக்டர் மீது லாரி மோதி கோர விபத்து.. 9 பக்தர்கள் உயிரிழப்பு - 42 பேர் படுகாயம்
Published on

உத்தரப் பிரதேசத்தில் டிராக்டர் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் இன்று காலை பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

 லாரி, பின்புறத்தில் மோதியதால் டிராக்டர் டிராலி கவிழ்ந்ததாக காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் சிங் தெரிவித்தார்.

சம்பவத்தின் போது டிராக்டர்-டிராலியில் 61 பக்தர்கள் இருந்தனர். அவர்கள் ராஜஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தனர். விபத்தில் காயமடைந்த 43 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 43 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் பக்தர்கள் உயிரிழந்ததற்கு உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com