மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான பிரசார பாடலை வெளியிட்டது திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி- பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற மம்தா பானர்ஜி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான பிரசார பாடலை வெளியிட்டது திரிணாமுல் காங்கிரஸ்
Published on

மேற்கு வங்கத்தில் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் பிரசார பாடலை வெளியிட்டுள்ளது.

"அனைத்து எதிர்ப்புகளையும் மீறி பெங்கால் வெற்றி பெறும்" என்பது முக்கிய பல்லவியாக இந்த பாடலில் அமைந்துள்ளது.

மேலும், "புதிய திசையுடன் ஒரு புதிய பாதையில் நாம் பயணிக்கிறோம். உங்கள் இருள் புதிய விடியலுக்கு முன்னால் தோற்றுவிடும். நாங்கள் சிஏஏ அல்லது என்ஆர்சி-க்கு அஞ்ச மாட்டோம். தாய் வங்காளத்தின் வலிமையை நீங்கள் உணர்ந்துகொள்ள இன்னும் நேரம் இருக்கிறது. இந்த பூமியில் அனைவருக்கும் இடமுண்டு. அன்பு மிரட்டலுக்குப் பணியாது போன்ற வரிகள் இடம் பிடித்துள்ளன" போன்ற வரிகளும் இடம் பிடித்துள்ளன.

நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் நிறுவனமான I-PAC மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. தேர்தல் தொடர்பான முக்கியமான தரவுகளை திருட அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டது என குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com